அமெரிக்காவில் பெற்ற மகளை பாலத்திலிருந்து வீசி கொன்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாகாண...
அமெரிக்காவில் பெற்ற மகளை பாலத்திலிருந்து வீசி கொன்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாகாணத்தில் ஜான் ஜான்சு (John Jonchuck) என்ற நபர் தன் மனைவியை பிரிந்து 5 வயது மகள் போப் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் திகதி இரவு தனது காரில் அதிவேகமாக சென்ற ஜான்சுக்கை பொலிசார் விரட்டிச்சென்றுள்ளனர். அப்போது தம்பா வளைகுடாவிற்கு மேலுள்ள டிக் மிசனர் பாலத்தில் தனது காரை நிறுத்திய அவர் தன் மகள் போப்பை வீசிவிட்டு வேகமாக காரில் ஏறிச்சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த பொலிசார் சிறுமியின் பயங்கரமான அலறலை கேட்டதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து நீர்மூழ்கி வீரர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்த பொலிசார் கடலில் விழுந்த போப்பை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஜான்சுக்கை துரத்திப்பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஜான்சுயின் வழக்கறிஞர் கூறுகையில், தன் மகளை தூக்கி வீசுவதற்கு சில மணி நேரம் முன்னர் தான் போபின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்காக நான் ஜான்சுவிடம் பேசச் சென்றேன் என்றும் அப்போதே அவரது நடவடிக்கைகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.
Click here to play this video
COMMENTS